மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

றைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் ஹொரணையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது பல்வேறு அரச முக்கியஸ்தர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அன்னாருடைய இறுதிக் கிரியைகள் நாளைய தினம் ஹொரணை விளையாட்டு மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 27 ஆம் திகதி காலமானார்.

ரட்ணசிறி விக்ரமநாயக்க 2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -