ஏறாவூர் பொது அமைப்புக்களுக்கு பல்வேறு உதவிகள்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட சுமார் 20லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (26) ஏறாவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எஸ்.எம் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்களை கையளிப்பதனையும், மாகாண சபை உறுப்பினர் சுபையிர் உரையாற்றுவதனையும், கலந்துகொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் படத்தில் காணலாம்.

இப்பொருட்களானது ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், பள்ளிவாசல்கள், பாலர்பாடசாலைகள் என்பவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -