இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான ரத்னசிறி விக்கிரமனாயக்க ஒரு நேர்மையான அரசியல்வாதி. 1962 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட அவர் கட்சியில் அமைப்பாளர், உப தலைவர் என பல பதவிகளை வகித்து கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பெரும் சேவையாற்றியர்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது ஆட்சிக்காலங்களில் இருமுறை பிரதமர் மந்திரியாக பதவி வகித்த இவர் தன்னால் முடியுமான சேவைகளை நாட்டுக்கு ஆற்றியுள்ளார். அதில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி – பங்களிப்பு மிகமுக்கியமானவை. விசேடமாக, கடந்த காலங்களில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் அரங்கேறிய காலத்தில் நடுநிலை அரசியல்வாதியாக முஸ்லிம்கள் சார்பில் குரல் எழுப்பியிருந்தார்.
இவர் நாட்டுக்காக மேற்கொண்ட சேவைகளை சிறுபான்மை சமூகம் நன்றியுடன் நினைவுகூற வேண்டும். - என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.