யாழில் அவதிப்படும் முஸ்லீம் பெண்ணின் கண்ணீர் கதை..!

பாறுக் ஷிஹான்-
காலை 7 மணி இருக்கும் எனது தொலைபேசிக்கு புதிய இலக்கம் ஒன்றில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த தொலைபேசி அழைப்பை தொடர்பு கொண்டபோது அழும் குரலுடன் ஒரு பெண் தனது கதையினை என்னிடத்தில் கூறுகின்றார்.

தான் யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியமர வந்து 8 வருடங்களுக்கு மேலாகின்றது.தற்போது தான் ஒரு சிறிய வீடு ஒன்றை கட்டி முடித்திருக்கின்றேன். எனக்கு ஒரு பாரிய குறை மலசலகூடம் இல்லை. 

இதன் காரணமாக அண்டைய வீடு உறவினர்களின் வீட்டுக்கு சென்று வருகின்றேன்.

எனக்கு ஏதாவது வழிவகை செய்து மலசல கூடம் கட்டுவதற்கு உதவி செய்ய முடியுமா? இதனை உங்களிடம் கேட்ட எனக்கு வெட்கமாக உள்ளது.என தெரிவித்தார்.

அத்துடன் அப்பெண் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அமைப்புகள் கூட இந்தா அந்தா கட்டி தருகின்றோம் என ஏமாற்றுகின்றார்கள் என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்ககாத நானும் அவருக்கு ஆறுதல் கூறி எனக்கு தெரிந்தவர்களுடன் கதைத்து இதனை செய்து தர முயற்சிப்பதாக கூறி தொலைபெசி அழைப்பினை துண்டித்து விட்டேன்.

இந்த விடயத்தை நான் எவர் மனதையும் நோகடிக்கும் வகையில் எழுதவில்லை.சற்று நாம் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறான பல விடயங்கள் ஒவ்வொரு மீள் குடியேறிய முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதை நான் அறிவேன்.

இந்த குறைகளை சிலர் நிறைவு செய்ய சிலர் வெட்கத்தை விட்டு கேட்டு விடுவார்கள்.பலர் இவ்வாறாக கேட்டு விட்டு ஏமாற்றப்பட்டு ஏமாறி மீளவும் அகதி யாக வேறேங்கும் செல்கின்றார்கள்.இது தான் யாழ்ப்பாண முஸ்லீம் சமூகத்தில் நடப்பவை.

பல தரப்பட்ட அமைப்புக்கள் உள்ள இந்த சமூகத்தில் ஒற்றுமை என்ற விடயத்திற்கு இடமில்லை. என்றே கூறமுடியும்.

வீணான அதிக செலவுகளும் ஒன்று கூடல்களும் பொன்னாடை போர்த்தி அதனை செய்தியாக வெளியிடவுமே தற்போது மீள்குயேற்றத்தை அவர்களால் திருப்திப்படுத்த முடிகின்றது.

இதனை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் அப்பாவி முஸ்லீம் மக்களை ஏமாற்றி தங்கள் வயிறுகளை நிறப்பும் சிலர் இன்னும் அம்மக்களை ஏமாற்றவே முயல்கின்றனர். அந்த பாமர மக்கள் இருக்கும் வரை அவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்.

எனவே தான் மேற்குறிப்பிட்ட முஸ்லீம் பெண்மணி போன்று எனது ஊடக வாழ்வில் பல பேரை சந்தித்துள்ளேன். இவர்களின் வாழ்க்கை இன்று கூட அப்படியே தான் உள்ளது என்பதை நான் உரக்க சொல்வேன். இதனை இங்குள்ள வீணாக செலவுகளை மேற்கொள்ளும் பொது அமைப்புக்கள்,தனவந்தர்கள், அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது சமூகத்தில் இவ்வாறாக இருக்கின்ற மக்களை இனங்கண்டு இனியாவது பாரபட்சம் பாராது உதவ வேண்டும்.அவ்வாறு உதவி செய்து அதிகளவான முஸ்லீம் மக்களை மீண்டும் யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேற்ற நடவடிக்கை எற்படுத்த வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -