ஹாசிப் யாஸீன்,அகமட் எஸ்.முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித்பிரேமதாசாவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் கல்முனை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்காரியாலயத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு இலவச சீமெந்துபக்கட்டுக்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சீமெந்து பக்கட்டுக்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், கல்முனை தேசிய வீடமைப்புஅதிகார சபைக் காரியாலய முகாமையாளர் எம்.இப்றாகிம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர்,சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச்செயலாளர் நௌபர் ஏ.பாவா, வீடமைப்பு உத்தியோகத்தர் ஏ.ஹமீட் உள்ளிட்ட பிரதேச செயலகஉத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 44 வறிய குடும்பங்களுக்கு இலவச சீமெந்து பக்கட்டுக்கள்அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.