அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார் சசிகலா- தமிழ் நாடு

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பதவியேற்றார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பதவியேற்று கொண்டார். பதவியேற்பின் போது முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். முன்னாள் முதலவர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக புதிய பொதுச்செயலாளராக சசிகலா இன்று பதவியேற்றார். பதவியேற்பின் போது முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று 12.20 மணிக்கு புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து தொண்டர்களை அழைத்து வந்தனர்.

மேலும் சசிகலா வரும் வழிநெடுக பேனர் மற்றும் கட்அவுட்களும் வைக்கப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகம் வந்ததும், அந்த வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா முதலில் மாலை அணிவித்தார். இதற்காக எம்ஜிஆர் சிலை இருக்கும் பகுதியில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி அலுவலகத்திற்குள் சென்ற சசிகலா அங்கு பொதுச்செயலாளர் அறையில் பொறுப்பேற்று கொண்டார்.

மேலும் சசிகலா பொறுப்பேற்பதை பார்க்க கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன் பகுதியில் பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டது. மேலும் பதவியேற்பு விழாவை ஒட்டி போயஸ் கார்தான் முதல் ராயப்பேட்டை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -