கிழக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வொன்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 28, 29ம் தினங்களில் (நாளை மற்றும் நாளைமறுதினம் ) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வானது பயிலுனர் சட்டத்தரணியும் இலங்கை கிரிக்கெட் நடுவர் குழுவின் உறுப்பினருமான முஹம்மத் ஹம்மாத் விடுத்த அழைப்பின் பேரில் நடைபெறுகின்றது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் விசேடமாக இந்நிழ்வில் பங்குபெறவுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள கிரிக்கெட் விளையாட்டில் திறமையான இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் விசேட நுணுக்கங்கள் தொடர்பான அறிவினை பெற்றுக் கொள்ள அரிய சந்தர்ப்பமாகும். ஆர்வமுள்ள இளைஞர்கள் பின்வரும் நபர்களை தொடர்பு கொள்ள முடியும்.
அம்பாறை மாவட்டம் சட்டத்தரணி A.L. ஆஸாத் 0777497979
மட்டக்களப்பு மாவட்டம் R.A.M. வாஷித் 0767979298
திருகோணமலை மாவட்டம் சட்டத்தரணி ஹாஜா முஹம்மட் 0772633161