அம்பாறை கல்முனைக்குடி கடற்கரையில் இருந்து மீன்பிடிப்பதற்காக இரண்டு இயந்திரப் படகில் சென்ற 6 மீனவர்கள் 8 நாட்களா கியும் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழமை போல ஆழ் கடலுக்குச் சென்று 2 அல்லது 3 தினங்களில் மீன்பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்புவது வழமையானது எனவும், கடந்த 24 ஆம் திகதி கல்முனைக்குடி கடற்கரையில் இருந்து இரண்டு இயந்தி ரப்படகில் 6 மீனவர்கள் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் .
இந்த நிலையில் அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 8 நாட்களாகியும் கரைக்கு திரும்பாதையடுத்து அவ ர்கள் கடலில் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடி மீட்டுத்தருமாறு மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவி த்தனர்.