கல்முனைக்குடியில் மீன்பிடிக்க சென்ற 06வர் மாயம்..!!

ம்பாறை கல்முனைக்குடி கடற்கரையில் இருந்து மீன்பிடிப்பதற்காக இரண்டு இயந்திரப் படகில் சென்ற 6 மீனவர்கள் 8 நாட்களா கியும் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழமை போல ஆழ் கடலுக்குச் சென்று 2 அல்லது 3 தினங்களில் மீன்பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்புவது வழமையானது எனவும், கடந்த 24 ஆம் திகதி கல்முனைக்குடி கடற்கரையில் இருந்து இரண்டு இயந்தி ரப்படகில் 6 மீனவர்கள் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் .

இந்த நிலையில் அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 8 நாட்களாகியும் கரைக்கு திரும்பாதையடுத்து அவ ர்கள் கடலில் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடி மீட்டுத்தருமாறு மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவி த்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -