பாறுக் ஷிஹான்-
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் 10 ஆவது சந்தேக நபரை ஒரு வருடம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டார். குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான அதிகாரம் இல்லை.
இந் நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடர வேண்டியுள்ளதாக கூறி விளக்கமறியலின் காலத்தை நீடிக்குமாறு மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர். அதனை ஏற்றுக்கொன்ட நீதிபதி சந்தேக நபரை ஒரு வருடம் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.