வித்தியா படுகொலையின் 10 ஆவது சந்தேக நபருக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு..!

பாறுக் ஷிஹான்-
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் 10 ஆவது சந்தேக நபரை ஒரு வருடம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டார். குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான அதிகாரம் இல்லை.

இந் நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடர வேண்டியுள்ளதாக கூறி விளக்கமறியலின் காலத்தை நீடிக்குமாறு மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர். அதனை ஏற்றுக்கொன்ட நீதிபதி சந்தேக நபரை ஒரு வருடம் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -