யாழில் எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வு அனுஷ்டிப்பு..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் எம். ஜி ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று(17) செவ்வாய்க்கி ழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜி. ஆர் சிலையருகே நடைபெற்றது.

ஈழத்து எம். ஜி. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,சிறப்புவிருந்தினராக இந்திய துணைத்தூரதக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என். சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் 

எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு உடுபுடவைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -