மாகாண பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை – கல்வி அமைச்சர்

ஏறாவூர் ஏ.எம்.றிகாஸ்-
கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் 13.01.2017 வெள்ளிக்கிழமையன்று மூடப்படவுள்ளது. இத்தினத்திற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21 ஆந்திகதி சனிக்கிழமையன்று நடாத்தப்படவேண்டுமென கிழக்கு மாகாண கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது..

இதுதொடர்பாக கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக்கல்வி, முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜேஎஸ்டிஎம் அசங்க அபேவர்தன சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த விஷேட விடுமுறை தொடர்பாக தொலைநகல் (பெக்ஸ்) மூலம் அறிவித்துள்ளார்.

வியாழக்கிழமை போயாதின விடுமுறை வெள்ளிக்கிழமை வேலைநாள் பின்னர் மீண்டும் சனிக்கிழமை (தைப்பொங்கல்) மற்றும் ஞாயிறு விடுமுறை வருகின்றது. இதனால் இந்துக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் கருத்திற்கொண்டு பல்வேறு தரப்பினரும் விடுத்த வேண்டுகோளையடுத்து மாகாணக் கல்வியமைச்சு விஷேட விடுமுறை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -