மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாடுகளுடன் மோதி விபத்து. 15 எருமை மாடுகள் துடிதுடித்து பலி. 10 மாணவர்கள் படுகாயம்.


பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணத்திலிருந்து மொரட்டுவ நோக்கிப் பயணித்த பேருந்து ஏ-9 முதன்மைச் சாலையில் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சாலையைக் கடந்த எருமை மாட்டுப் பட்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 எருமை மாடுகள் பரிதாபமாக உயரிழந்ததுடன். 10மாடுகள் படுகாயமடைந்தன. பேருந்தில் பயணித்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று மொரட்டுவ நோக்கிப் புறப்பட்ட பேருந்து இரவு 9.30 மணியளவில் மாங்குளத்தை தாண்டி கொல்லர்புளியங்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வீதியைக் கடந்த மாட்டுப் பட்டியின் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மாங்குளம் வைத்தி யசாலைக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நோயாளர் காவுவண்டியில் சம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் வைத்தியசாலை ஊழியர்கள் படுகாயமைந்தவர்களை வைத்தியசலைக்கு ஏற்றிச் சென்றனர்.

சிலர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் 15 மாடுகள் உயிரிழந்ததோடு 10 மாடுகள் படுகாயமைந்து வீதியில் கிடக்கின்றன. படுகாயடைந்த மாடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கால்நடை வைத்தியரின் உதவி நாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -