15 வயது சிறுமி கடத்தல் - இளைஞனுக்கும் முதியவருக்கும் விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச்சென்ற இளைஞனுக்கும் அவருக்கு உதவி வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் இம்மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (03) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ஷமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மொறவெவ, குணவர்தனபுர பகுதியைச்சேர்ந்த அமித் குமார (20வயது) மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான பீ.ஜினதாஷ (56வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த 12ம்மாதம் 13ம் திகதி 15 வயது சிறுமியை 20 வயதான இளைஞன் கடத்திச்சென்று பண்டாரவெல. எடம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வீடொன்றில் தங்கியிருந்த போது, சிறுமியைக் காணவில்லையென பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை மேற்கொண்ட மொறவெவ பொலிஸார் 15 வயது சிறுமியையும் 20 வயது இளைஞனையும் கைது செய்தனர்.

இதேவேளை அதே இடத்தைச்சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான 56 வயதுடைய நபர் கடத்திச்சென்ற 15 வயது சிறுமியை வீட்டில் வைத்திருப்பதற்கு உதவி வழங்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியதுடன் சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -