அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைவு..?

சுங்க வரி இல்லாமல் நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், தற்பொழுது காணப்படும் அரிசியின் விலையிலிருந்து 20 ரூபாய் குறைவாக நுகர்வோருக்கு வழங்க முடியும் என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி, சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இறங்குமாதி செய்யப்படும் அரிசி ஜனவரி முதலாம் வாரத்திலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

பெரும்போகத்தின் போது வறட்சி எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் நெல் பயிர்ச்செய்கையை குறைத்துள்ளமை மற்றும் அரிசி வியாபாரிகள் அரிசி தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதால், அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதேவேளை சந்தையில் தற்பொழுது அரிசியின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -