சொன்ன வாக்கினை நிறைவேற்றிய ஜனாதிபதி அவர்களுக்கு கொட்டகலை பிரதேச மக்கள் நன்றி தெரிவிப்பு

க.கிஷாந்தன்-

சொன்ன வாக்கினை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வானூர்தி மூலம் வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி காரியாலய மைதான வளாகத்தில் திடீரென தரையிறக்கப்பட்டது.

வானூர்திகள் தரையிறங்கியதை கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்தில் கூடினர். அவ்விடத்தில் தறையிறங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நட்பு ரீதியாக இவர்களுடன் உரையாடினார். இதன்போது அவர்களின் குறைநிறையைக் கேட்டறிந்த ஜனாதிபதி உடனடியாக ஆவணம் செய்ததாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இம்மாணவர்களினால் எடுக்கப்பட்ட கொட்டகலை வைத்தியசாலைக்கு ஒரு அம்புலன்ஸ் வண்டி தேவை என்பதை விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் ஒரு வாரத்திற்குள் இந்த நவீன் முறையிலான புதிய அம்புலன்ஸ் வண்டியினை 27.01.2017 அன்றை தினம் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

இதற்கு நன்றி கூறும் வகையில் 28.01.2017 அன்று இந்த வண்டியினை பொதுமக்கள் சேவைக்காக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் நன்றி நவிழும் நிகழ்வும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. சாவித்ரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது நுவரெலியா மாவட்ட சுகாதார பிரிவின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கொட்டகலை பிரதேச குறைநிறைகளை நிவர்த்தி செய்த ஜனாதிபதி அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுகாதார பிரிவினர் நன்றிகளை தெரிவித்தனர்.

சொன்ன வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கொட்டகலை பிரதேச மக்களுக்கு திகழ்வதாக இப்பிரதேச மக்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -