மஸ்கெலியாவில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது இளைஞன் பரிதாப மரணம்

க.கிஷாந்தன்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் 19.01.2017 அன்று பகல் 2.00 மணியளவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் உயிரிழந்தவர் கிங்கொரா தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை ஸ்டீபன் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த அந்தோனி செல்வம் வயது 34, ஞானசேகரன் கருணாநிதி வயது 25 என்பவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்தினை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு வரும் போது திடீரென கலைந்த குளவிகள் இவர்களை சராமரியாக தாக்கியுள்ளதாகவும் இதனால் இவர்கள் மயக்கமுற்றதாகவும் அதனைத்தொடர்ந்தே பொதுமக்களால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -