யாழ் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சம்பிரதாய மரபு ஒழுங்குகளிற்கு அமைவாக சிறப்பாக செவ்வாய்க்கிழமை இன்று (10) நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறுவதுடன் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்குரிய பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இன்றும் (10) நாளையும் (11) நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 1939 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

மேலும் இந்த பட்டமளிப்பு நிகழ்வுகளானது இரண்டு தினங்களாக ஒன்பது அமர்வுகளாக நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விரிவுரையாளர்கள் பட்டதாரிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் விசேட கலாசார அணிவகுப்புடன் அரங்கிற்கு அழைத்துவரப்பட்டு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -