வலம்புரி கவிதா வட்டத்தின் 33வது கவியரங்கம் எதிர் வரும் ஜனவரி 12ந்திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு அல்.ஹிக்மா கல்லூரியில், மறைந்த வகவ ஸ்தாபகச் செயலாளர் கவிஞர் கவின் கமல் (இர்ஷாத் கமால்தீன்) அவர்களின் நினைவரங்காக நடைபெறும்.
வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெறும் இவ்வரங்கில், வகவ ஸ்தாபகர்களான டாக்டர் தாஸிம் அகமது, எஸ்.ஐ.நாகூர்கனி, கலைக்கமல் ஆகியோருடன் வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், அல் அஸூமத், மேமன்கவி மற்றும் வகவ மூத்த அங்கத்தவர்கள் பலரும் கவிஞர் கவின்கமலுக்கான நினைவுரைகள் நிகழ்த்துவார்கள். தொடர்ந்து கவியரங்கு இடம் பெறும்.