”535பேருக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைத்த அமைச்சர் நஸீர்”

சப்னி அஹமட்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் உள்ள சங்கங்கள் ஊடாக வறிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 535பேருக்கு  வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (08) சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஐ.எம் நயீம் தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது, ஒலுவில் மின்ஹா மாதர் சங்கத்தின் அங்கத்தவர்கள் 184 குடும்பங்களுக்கு வாழ்வாதார உபகரணங்களும், ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை முச்சக்கர வண்டி சங்க 110அங்கத்தவர்களுக்கான டயர்களும் , 176 விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களும், அட்டாளைச்சேனை மீனவர் சங்கத்தின் 65மினவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் உபகரணங்களை வழங்கி வைத்து அங்கு உரையாற்றினார் இதன் போது அங்கு அவர் உரையாற்றிய போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாழும் மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கொண்ட எம்மால் முடிந்தவரை சமூக சேவைகளை நாம் வழங்கி வருகிறோம். அந்த வகையில் எனது முயற்சியினால் குறித்த வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வருகின்றோம் அதிலும் விசேடமாக சங்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான வாழ்வாதார உதவிகள் பல தொடர்ந்தேர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.  இவ்வாறான வாழ்வார உபகரணங்களை வைத்து உங்களால் முடிந்த வாழ்க்கைத்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். என்றார்

இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் எம்.ஐ ஹனீபா. முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித்தவிசாளர் நபீல், அமைச்சரின் பிரயேத்தியக செயலாளர் வாஹிட்,கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். மக்கள் வங்கி சம்மாந்துறை கிளையின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நபீல், சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -