6,500 இராணுவ வீரர்களுக்கு பொதுமன்னிப்பு

பொதுமன்னிப்பின் அடிப்படையில் 6,500 இராணுவ வீரர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் இராணுவப்படையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இராணுவச்சட்டங்களை மீறி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தப்பிச் சென்ற இராணுவ வீரர்களை முறையாக பதவியிலிருந்து நீக்குவதற்காக டிசம்பர் முதலாம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த பொது மன்னிப்பு காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்திருந்தது.

இதனடிப்படையில், மூன்று மாத காலப்பகுதிக்குள் 6,500 பேர் பொது மன்னிப்பின் பேரில் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -