கீத்-
அந்தமான்,நிக்கோபா தீவு மீனவர்கள் 6 மீன்பிடிக்கச் சென்று 30 நாட்கள் கடந்த நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து உணவுகள், எரிபொருள் முடிந்த நிலையில் புல்மொட்டைக் கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டு நின்றவர்களை இன்று அதிகாலை திருகோணமலை புல்மொட்ட மீனவர்கள் கடற்படைக்குத் தெரிவித்து கடற்படையினர் நேற்று இரவு அவர்களின் படகில் கட்டிழுத்து கரையை அடைந்தனர்.குறித்த ஆறு மீனவர்களும் படகில் மீன்பிடிப்பதற்காக வருகை தந்திருந்த வேளை டோரா படகு பழுதடைந்து தத்தளித்துக்கொண்டிருந்ததாகவும் மீனவர்கள் கண்டு கடற்படையினரிடம் தெரியப்படுத்தியதையடுத்து இம்மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
படகுடன் மீட்கப்பட்ட அந்தமான்தீவைச்சேர்ந்த மீனவர்கள் புடவைக்கட்டு கடற்படை முகாமில் இருப்பதாகவும் படகினை திருத்தி நாட்டுக்கு அனுப்பவுள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.