ஹோல்புரூக் ஊட்டுவெலி தோட்டம் பெங்கடன் டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆந் திகதி ஜனாதிபதியி மைத்திரிபால சிரிசெணவினால் திறந்து வைக்கப்படவுள்ள 71 தனிவீடுகளை அமைச்சர் பி.திகாம்பரம் பார்வையிட்டார்.
இதன் பின்னர் இன்று ஹோல்ப்ரூக் கிளப்பில் இடம்ப்பெற்ற கலந்துரையாடல் கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதில் “ட்ரஸ்ட்” நிறுவனத்தின் நுவரெலியா பணிப்பாளர் லால் பெரேரா மற்றும் அமைச்சின் தலைமை கணக்காளர் திருமதி சந்திராணி ஆகியோரோடு அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.