தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தினால் வீடுகள் கையளிப்பு..!



ளுத்துறை மாவட்டம் மதுகம வெலிபென்ன பல்லேகொட தோட்டத்தில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு புதிகாக நிர்மானிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (05-01-2017) மலைநாட்டு புதிய கிராமங்கள்இ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களிள் தலைமையில்; இடம்பெற்றது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ம் திகதி குறித்த தோட்டத்தில் இடம்பெற்ற தீவிபத்து சம்பவத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அவ்விடத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள் உறுதியளித்ததற்கமைய பசுமை பூமி வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் நிர்மானித்து தோட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் M. திலகராஜ் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை உட்பட அதிதிகள் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -