இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் சம்மாந்துறை, தைக்காப் பள்ளி வீதியைச் சேர்ந்த மர்ஹும். மீராலெப்பை உதுமாலெப்பை, மீராலெப்பை பிச்சையும்மா ஆகியோரின் புதல்வி உதுமாலெப்பை சிபானா சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்முனை மஃமூத் பெண்கள் கல்லூரியில் கற்றார். 2012 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்து சட்டக் கல்வியினை தொடர்ந்து இறுதியாண்டுப் பரீட்சையில் இரண்டாம் வகுப்பில்(2nd Class) சித்தியடைந்து சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்யப்படவுள்ளார்.
இந் நிகழ்வானது பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் மற்றும் ஏனைய நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில்(Supreme Court Complex) நடைபெறவுள்ளது.