“புரளியின் ஓர் ஆரம்பம்” நுகேகொடையில் மக்கள் பேரணி..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
நாட்டு மக்கள் மத்தியில் இந்த நல்லரசு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள மனக் கசப்பினையும் வெறுப்பினையும் வெளிப்படுத்தும் முகமாக மக்கள் அணியைத் திரட்டுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அணி சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்காக “புரளியின் ஓர் ஆரம்பம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மக்கள் கூட்டம் இம்மாதம் 27ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இக் கூட்டத்திற்கு நாட்டின் நாலாபுறமிருந்தும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வருவதற்கு ஏற்பாடாகியுள்ளன. எனவே இந்த அரசாங்கத்தின் மீது அமைச்சர்களும் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறுப்புக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் அந்த வெறுப்பை வெளிப்படுத்தவும் எதிர்கால முஸ்லிம் நலனுக்காக வேண்டி ஒரு செய்தியைப் பெறுவதற்காக வேண்டியும் இக் கூட்டத்தில் நாட்டின் நாலாபாகங்களிலுமுள்ள முஸ்லிம்கள் திரளாக வர வேண்டும் என்று முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் ஊடக பிரசாரகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சென்ற வார இறுதியில் நெலும்பொகுண மாவத்தையில் நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, பிரதேச சபை மட்டத்தில் தற்போது தலைவர்கள், உபதலைவர்கள், ஏனைய உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அதேபோல நகர சபை போன்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் தத்தமது பிரதேசத்திலிருந்து இக் கூட்டத்தில் வந்து கலந்து கொள்வதற்காக வேண்டிய கசல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து நாட்டின் நாலா பக்கங்களிலும் “புரளியின் ஓர் ஆரம்பம்”எனும் தொனிப்பொருளில் பல கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த கூட்டங்களுக்கு தலைவராக மஹிந்தானந்த அளுத்கமகேவும் அதன் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன அபேகுணவர்வர்தனவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பல பாகங்களிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்கள் சார்பாக ஏ.எச்.எம்.அஸ்வர் தமது கருத்துக்களை முன்வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -