உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள்..!

டந்த 2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பத்மனாதன் குருபரேஷன் தமிழ் மொழி மூலப் பரீட்சையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவர் க.யதுர்சாயன் தொழில்நுட்பப் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் ஆர்.ஜி.நிசல் புன்சர என்ற மாணவரும், வர்த்தகப் பிரிவில் ஆனந்தா வித்தியாலயத்தின் முதித்த அக்கலங்க ராஜபக்ச என்ற மாணவரும், கலைப் பிரிவில் விகாரமகாதேவி பெண்கள் வித்தியாலயத்தின் யு.டபிள்யூ.அமந்தா பரமியும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

ஆங்கில மொழி மூலப் பரீட்சையில் கண்டி பெண்கள் பாடசாலையின் ஆர்.இந்தீவரி கலைப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தப் பரீட்சையில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 550 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -