காத்தான்குடி மீடியா போரத்தின் வடக்கு நோக்கிய பயணத்தில் வில்பத்து மறிச்சக்கட்டி முஸ்லிம்களுடனான சந்திப்பு
கிழக்கு மாகாணத்திலுள்;ள காத்தான்குடி மீடியா போரத்தின் வடக்கு நோக்கிய பயணத்தில் வில்பத்து மறிச்சக்கட்டி முஸ்லிம்களை27.1.2017) வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துiராயடினர்..
வட மாகாணத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர்.
இப்பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேறிய முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர்.
அப் பிரதேசத்தின் பழமைவாய்ந்த, சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்ற பூர்வீகமான பள்ளிவாயல்கள், காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களால் 1980 களில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் என்பன பார்வையிடப்பட்டதோடு இதன் போது ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன.
இதன் போது அப்பிரதேசத்திலுள்ள அதிகாரிகளையும் சந்தித்ததுடன்
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த களப்பயணத்தில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் மற்றும் பொருளாளர் எஸ்.ஏ..கே.பழீலுர் ரஹ்மான் மற்றும் பஸால் ஜிப்ரி, எம்.நசார், டீன் பைறூஸ், எம்.எஸ்.எம்.சஜி, எம்.அஸீம், மௌலவி எம்.நௌபர், எம்.எஸ்.எம்.நூர்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.