அரிசியின் விலையில் மாற்றம்..!

ள்நாட்டு அரிசி ஒரு கிலோகிராமின் விலை 8 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து உள்நாட்டு அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஹேமக பெர்ணான்டோ கூறினார்.

அரிசி மீதான இறக்குமதி வரியை 65 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த 6 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் பிரகாரம், அரிசி இறக்குமதி தீர்வை வரியான 15 ரூபாவை மாத்திரம் அறவிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இதன் மூலம் தனியார் வர்த்தகர்களுக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது,

இதன் மூலம் அரிசி ஒரு கிலோகிராமை 76 ரூபாவிலும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அறிக்கையொன்றினூடாக நிதியமைச்சு தெரிவித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -