சிறைக்குள் பாரிய கலவரம் : பல கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு

பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 15க்கு மேற்பட்ட கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இருதரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டுள்ளனர்.

தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர்.

சம்பவத்தில் பல கைதிகள் உயிரிழந்துள்ளதோடு பெரும்பாலானோர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிறைக்குள்  பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -