க.கிஷாந்தன்-
அட்டன் போடைஸ் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் ரமேஷ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்.
கேள்வி - இந்த வருடத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுவார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன ?
பதில் - பொருத்திருந்து பார்ப்போம். முதலில் மலையகத்தில் உள்ள மாற்றங்கள் எல்லாம் சென்றதன் பின் முடிவு எடுப்போம். பொருந்திருந்து பார்ப்போம். அரசாங்கம் எப்படி இருக்கு என்று.
கேள்வி - முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவருடன் இணைந்து செயற்படுமா ?
பதில் - இந்த அரசாங்கம் மட்டுமல்ல. எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் சிறுபான்மை மக்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவர்களுடன் இணைந்து செயற்படும் என மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவித்தார்.