ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்ட நாங்களும் ரெடி என்று கிளம்பிய நடிகர் சங்கம்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு ஆதரவாக ஜனவரி 20-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஆகியவை பங்கேற்கும் என நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் சென்னையில் அறிவித்துள்ளார். தமிழ் உணர்வுடன் அனைத்து நடிகர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என பொன்வண்ணன் கூறியுள்ளார். மாணவர் போராட்டம் இந்த அளவுடன் நின்றுவிடாமல் பலதளங்களில் விரிவடைய வேண்டும் என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.

திரைப்பட படப்பிடிப்பு ரத்து

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -