போலி நாணயத்தாள்களை அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு..!

மாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஐந்தாயிரம் போலி நாணயத் தாளுடன் கடை ஒன்றுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற போது, கடை உரிமையாளர் குறித்த நபர்களிடம் இருக்கும் பணம் போலியானது என அறிந்து பொலிஸாருக்கு இரகசியமாக அறிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய அனைத்து உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -