யாழில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிரசவித்த தாய்..!

பாறுக் ஷிஹான்-
ரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தை மற்றுமொரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவம் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி 22 இல் சத்திரசிகிச்சையின் மூலம் 3 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மகப்பேற்று பெண்ணியல் நிபுணர் கே. சுரேஸ்குமார் குறித்த சத்திரசிகிச்சையினை மேற்கொண்டுள்ளார் ஊர்காவத்துறை பகுதியைச் சேர்ந்த வசீகரன் காயத்திரி தம்பதியினருக்கே இந்த மூன்று குழந்தையும் பிறந்துள்ளது.

3 குழந்தைகள் நேற்று 11.28 மணியளவில் பிறந்துள்ளன. இரு ஆண்குழந்தையும் ஒன்று பெண்குழந்தையுமாக பிறந்துள்ளன. நள்ளிரவு 11.27 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகளும், 11.28 மணியளவில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. 1கிலோவும் 900 கிராம் மற்றைய குழந்தை 1கிலோ 560 கிராம் அடுத்த குழந்தை 2கிலோவும் 100 கிராம் எடையிலும் பிறந்துள்ளன.

மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோன்று ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சத்திரசிகிச்சையினை குறித்த வைத்திய நிபுணரே மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -