சாய்ந்தமருது பிரதேச மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு..!

ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன்-
சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச வறிய மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள்வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) வொலிவேரியன் பல்தேவைக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

லம்கோ அமைப்பின் (லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த கிரிக்கெட் அமைப்பு) ஏற்பாட்டில் ஆசிரியர் இஸட்.ஏ.ஜாபீர்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதில் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஏ.நாபித், ஓய்வுபெற்ற முன்னாள் அம்பாறை மாவட்டவிளையாட்டு அதிகாரியும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஆலோசகருமான எம்.ஏ.நபார், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.எம்.தௌபீக், ஏ.எம்.றினோஸ், டவுன் ட்ரவல்ஸ் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.ஜலீல், இக்றா மொபைல் பணிப்பாளர்யூ.எல்.ஜலால், ஷஸ்கோ பணிப்பாளர் கே.எல்.எம்.சதாத் உள்ளிட்ட பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

இதன்போது 500 மாணவர்களுக்கு அதிதிகளினால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -