பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்ட முயற்சியினால் நகர சபையினால் வடிகான்களுக்கு புதிய மூடிகள் இடப்பட்டன.



எம்.ரீ. ஹைதர் அலி-

காத்தான்குடி பிரதேசத்திற்குற்பட்ட கடற்கரை வீதி, அல்-அமீன் வீதி, கர்பலா வீதி, தாருஸ்ஸலாம் வீதி, அமானுல்லா வீதி, ஜாமியுள் ஆபிரீன் வீதி, அரபு கலாசாலை வீதி, ஊர்வீதி மற்றும் வாவிக்கரை வீதி போன்றவற்றில் காணப்படும் சேதமடைந்த மற்றும் மூடிகள் இடப்படாத நிலையில் காணப்படும் வடிகாங்களுக்கான முடிகளை இடுவது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கடந்த 2017.01.05 திகதி பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஸபி உடன் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மேலும், சேதமடைந்த மற்றும் மூடிகள் இடப்படாத நிலையில் காணப்படும் வடிகான்களை பார்வையிட்டதோடு, இனங்காணப்பட்ட 19 இடங்களில் மிகவும் துரிதமாக காத்தான்குடி நகரசபையின் மூலம் புதிய வடிகான் மூடிகளை இடுமாறும் நகர சபையின் செயலாளர் ஸபி அவர்களுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைவாக 2017.01.23ஆந்திகதி (இன்று) காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள மூடிகள் இடப்படாத மற்றும் சேதமடைந்த நிலையில் காணப்படும் வடிகான்களுக்கான புதிய மூடிகள் இன்று நகர சபையினால் இடப்பட்டதோடு தொடர்ச்சியாக இவ்வாறான ஏனைய இடங்களில் இனங்காணப்பட்ட வடிகான்களுக்கான மூடிகளை இடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -