எம்.ரீ. ஹைதர் அலி-
காத்தான்குடி பிரதேசத்திற்குற்பட்ட கடற்கரை வீதி, அல்-அமீன் வீதி, கர்பலா வீதி, தாருஸ்ஸலாம் வீதி, அமானுல்லா வீதி, ஜாமியுள் ஆபிரீன் வீதி, அரபு கலாசாலை வீதி, ஊர்வீதி மற்றும் வாவிக்கரை வீதி போன்றவற்றில் காணப்படும் சேதமடைந்த மற்றும் மூடிகள் இடப்படாத நிலையில் காணப்படும் வடிகாங்களுக்கான முடிகளை இடுவது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கடந்த 2017.01.05 திகதி பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஸபி உடன் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
மேலும், சேதமடைந்த மற்றும் மூடிகள் இடப்படாத நிலையில் காணப்படும் வடிகான்களை பார்வையிட்டதோடு, இனங்காணப்பட்ட 19 இடங்களில் மிகவும் துரிதமாக காத்தான்குடி நகரசபையின் மூலம் புதிய வடிகான் மூடிகளை இடுமாறும் நகர சபையின் செயலாளர் ஸபி அவர்களுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைவாக 2017.01.23ஆந்திகதி (இன்று) காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள மூடிகள் இடப்படாத மற்றும் சேதமடைந்த நிலையில் காணப்படும் வடிகான்களுக்கான புதிய மூடிகள் இன்று நகர சபையினால் இடப்பட்டதோடு தொடர்ச்சியாக இவ்வாறான ஏனைய இடங்களில் இனங்காணப்பட்ட வடிகான்களுக்கான மூடிகளை இடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.