விமலின் கைதுக்கு பின்னணியில் பசில்..?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கட்டளைகளை பின்பற்றாமையினாலேயே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

என்னுடன் இணைந்து அரசியலில் செயற்பட வேண்டும் என பசில், விமலிடம் வலியுத்தியுள்ளார் என்றும் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், பசிலின் இந்த கட்டளைக்கு உடன்படாத விமல் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி விலகிச் செல்லுமாயின் மைத்திரி தலைமையிலான கட்சியை ஏற்போம் என விமல் மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பசிலின் வழியை பின்பற்றாமையினாலேயே விமல் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள பத்திரிகை ஒன்றை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -