ஹாசிப் யாஸீன், அகமட் எஸ் முகைதீன்-
சாய்ந்தமருது சமூக சேவைக்கான மக்கள் அமைப்பின் (பாஸ்) புதிய காரியாலய திறப்பு விழா (21) சனிக்கிழமை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்பாக அமைந்துள்ள மேல்மாடியில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.சம்சுதீன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்காரியாலயத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, தொழிலதிபர் எம்.யஹியாகான், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.எம்.தௌபீக், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அன்சார், பாஸ் அமைப்பின் தலைவர் இஸட்.ஏ.சாதிக், தவிசாளர் எம்.இஸ்ஸதீன், செயலாளர் எம்.ஏ.அல்-அமீன், பொருளாளர் எம்.ஏ.அன்வர் சதாத் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.