சீட் பெல்ட் அணியாததால் பரிதாபமான முறையில் உயிரிழந்த சாரதி....

வுனியா செட்டிகுளம் பெரியகட்டுப் பகுதியில், வேமாக சென்ற டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, வீதியில் போடப்பட்டிருந்த வேகத் தடையினை கண்டு வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது, முன் கண்ணாடி ஊடாக தூக்கியெறியப்பட்டு மரணமானார். குறித்த சாரதி இருக்கை பட்டியை அணியாமையினாலே இந்த உயிராபத்து ஏற்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முருங்கனில் இருந்து பூனாவ நோக்கி இன்று காலை 6.30 மணியளவில் பயணித்த டிப்பர் வாகனம், வவுனியா செட்டிகுளம் பெரியகட்டுப் பகுதியில் வேகமாக பயணித்து கொண்டிருந்த போது வீதியில் போடப்பட்டிருந்த வேகத் தடையினை கவனிக்காததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன் கண்ணாடி வழியாக சாரதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

விபத்தில் முருங்கனைச் சேர்ந்த பிலிப்பு ஜேசுராஜா (வயது 55) என்பவரே மரணமடைந்தவராவார்.

வாகனத்தை செலுத்திய சாரதி இருக்கைப் பட்டி அணியவில்லை. இதன் காரணமாகவே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -