மாலைதீவில் முகாமிட்டு மீனவர்களைத் தேடும்பணியை மும்முறப்படுத்திய -ஹரீஸ்

அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் இன்னும் கண்டுபிடிக்கப்படாத கல்முனையைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும் தேடும் நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளார். அத்தோடு மாலை தீவு அரசின் பாதுகாப்பில் உள்ள இரண்டு மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாட்டினையும் மேற்கொண்டுள்ளார்.


விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் இன்று (7) சனிக்கிழமை மாலைதீவு நாட்டை சென்றடைந்து அந்நாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி மேற்படி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

மாலைதீவு நாட்டின் தலைநகரை சென்றடைந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கிருந்து அதிவேக படகின் மூலம் ஹாலிப் தித்து தீவை சென்றடைந்து அங்கு கரைசேர்ந்துள்ள இரண்டு மீனவர்களையும் சந்தித்தார். இதன்போது ஏனைய நான்கு மீனவர்கள் தொடர்பாக அம்மீனவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் தேடும் நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளார். அத்தோடு குறித்த இரண்டு மீனவர்கள் மற்றும் அவர்களது இயந்திரப்படகு என்பவற்றை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு அமைவாக மாலைதீவு நாட்டிற்கான இலங்கை தூதரக அதிகாரிகள் சகிதம் பிரதி அமைச்சர் ஹரீஸ் ஹாலிப் தித்து தீவில் முகாமிட்டு கடலோரபாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் மீனவர்களை தேடும் பணியினை முன்னெடுத்துவருகின்றார்.

அத்தோடு அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருடன் ஹாலிப் தித்து தீவிலிருந்து பிரதி அமைச்சர் தொடர்புகொண்டு அங்குள்ள நிலைமைகளை உடனுக்குடன் எடுத்துக்கூறிவருகின்றார். இதன்போது பாதுகாப்பு செயலாளர் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை பாதுகாப்புச் செயலாளர் ஊடாக குறித்த மீனவர்களை இந்திய, இலங்கை மற்றும் சர்வதேச கடற்பரப்பில் தேடும் நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளார்.

காணாமல்போன குறித்த மீனவர்களைத் தேடும் நடலடிக்கைக்கு மாலைதீவு அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -