க.கிஷாந்தன்-
அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் – குடாஓயா பகுதியில் 27.01.2017 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்மணி பத்தனை – திம்புள்ள பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் சத்தியமலர் (வயது – 24), மேலும் முச்சக்கரவண்டியின் சாரதியான ரவிச்சந்திரன் (வயது – 23), மற்றுமொருவர் பாக்கியராஜா (வயது – 26) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.