ஜேர்மன் நாட்டு பிரஜையிடம் திருடிய இளைஞர் கைது..

க.கிஷாந்தன்-

லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட பகுதியில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பொலிஸாரால் 25.01.2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பயணித்த ஜேர்மன் நாட்டு பிரஜையிடமிருந்த மடிக்கணணி மற்றும் இரண்டு டிஜிட்டல் கமராக்கள் ஆகியவற்றை திருடிய குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கந்தானை பகுதியை சேர்ந்தவர் என்றும் அவருக்கு தலவாக்கலை பகுதியை சேர்ந்த சில இளைஞர்களும் உதவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு சம்பவமானது கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதோடு, திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர் 25.01.2017 அன்று கைது செய்யப்பட்டு தலவாக்கலை பொலிஸாரால் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருடிய பொருட்களை ஜேர்மன் பிரஜையிடம் கையளித்துவிட்டதாகவும், தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஜேர்மன் பிரஜை இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதுவராலயத்தில் மேற்கொண்ட புகாரையடுத்தே பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் கூறியமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -