சர்வதேச அனர்த்த முகாமைத்துவ நிலையமும், லண்டன் ஹட்டஸ் பீல்ட் பல்கலைக்கழகமும் இணைந்து , இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனதின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான முதலாவது செயலமர்வு லண்டன் ஹட்டஸ் பீல்ட் பல்கலைக்கழகதில் 2017-01-27ஆம் திகதி) ஆரம்பமானது
இந்த நிகழ்வில் இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி ஹாமந்தி குணசேகர,சர்வதேச அனர்த்த முகாமைத்துவ நிலையதின் பணிப்பாளரும், லண்டன் ஹட்டஸ் பீல்ட் பல்கலைக்கழகப் பேராசிரியருமான திருமதி டிலாந்தி அமரதுங்க, பேராசிரியர் ரிச்சர்ட் ,ஐக்கிய நாடு அனர்த்த அபாய குறைப்பு பிரிவின் சர்வேதச பரப்புரை அதிகாரி ஜெரி வழகுயஸ் ஆகியோர் உரையாடுவற்றினார்கள்.
இங்கு இலங்கையின் 06 மாகாண முதலமைச்சர்களும்,கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் ஆசியா மன்றத்தின் பிரதிநிதி எம்.ஐ.எம்.வலீத் உள்ளீட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.