அரசை விட்டு விலகத் தயார் -அமைச்சர் ரிஷாத் அதிரடி அறிவிப்பு

வில்­பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அபகரிக்கும் முயற்சியே இது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வ­ரு­ம் அமைச்சருமான ரிஷாட் பதி­யுதீன் தெரிவித்துள்ளார்.

ஜனா­தி­பதி தனது பிழை­யான முடி­வினை மாற்­றிக்­கொள்­ளா­விட்டால் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு முஸ்­லிம்கள் சார்பில் ஐக்­கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்­ப­தற்கு தயா­ராக இருக்­கிறேன் என கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.


ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகளுடன் ஜனாதிபதி கைகோர்த்திருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான தேரர்களும் இனவாத சூழலியலாளர்களும் சில இனவாத ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி வருகின்றன.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் எமக்கு விடிவு கிடைக்கும், நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களை ஜனாதிபதி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -