இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலப்பிட்டிய வர்த்தகர் மொஹமட் சியாமின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவரான முன்னாள் காவல்துறை பரிசோதகரான லக்மினி இந்திக பமுனுசிங்கவே இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.
சிறையில் இருந்தவாறே, கலைப்பிரிவில் பயின்ற அவர் கலைமானி சான்றிதழை இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பெற்று கொண்டார். சிறையில் இருந்தவாறு அவர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கையை மேற்கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.