நாவிதன்வெளி பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு






எம்.எம்.ஜபீர்-

நா
விதன்வெளி பிரதேசத்தில் அல்-கிம்மா நிறுவனத்தின் அணுசரனையில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு மத்தியமுகாம், சவளக்கடை அல்-அமானா சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.வீ.நபாஸ் தலைமையில் நேற்றுமுன்தினம் 12ஆம் கொளனி பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் கலந்துகொண்டதுடன் இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.எம்.நிஸார் ஹாஜி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், நூராணியா ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எச்.அன்வர், அல்.-ஹூதா ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.நளீம், சிவில் பாதுகாப்புத் தலைவர் ஏ.வீ.வாகப்தீன், 3ஆம் கண்ட வட்ட விதானை ஏ.எம்.நஸீர், அல்-அமானா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் மௌலவி எஸ்.றிபாஸ், மௌலவி எஸ்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மஹிர் இலவச குடிநீர் இணைப்பினை மக்களின் பாவணைக்கு ஆரம்பித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -