மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, மீள் குடியேற்றம், சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு, பிரதமர் அலுவலகம் ஆகியன இணைந்து நடத்திய “தேசிய தைப்பொங்கல் விழா’ நேற்று நுவரெலியா சினிசிட்டா நகர சபை மைதானத்தில் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.
சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இவ்விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவரோடு அமைச்சர்கள் மனோ கணேசன், டி.எம். சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்டற உறுப்பினர்கள் எம். திலகராஜ், ஏ. அரவிந்தகுமார் அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
படப்பிடிப்பு பானா. தங்கம் மஸ்கெலியா, நுவரெலியா நிருபர்கள்.