புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்மந்தமாக கிழக்கு மாகாண சபையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகானசபை முதலமைச்சர் கேட்போர்கூடம்
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்மந்தமான கலந்துரையாடல் கிழக்கு மாகாணசபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது.

இதன்போது சமாதான நோக்கு, புதிய அரசியலமைப்பிற்கான மக்களின் கனவும் யதார்த்தமும். மற்றும் பல நூல்களும் பார்வைக்காக வழங்கப்பட்டன. குறிப்பிட்ட கலந்துரையாடலில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து புதிய அரசியல் அமைப்பின் நிலமைகள் பற்றி விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள், பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -