அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் 2016ம் ஆண்டுக்கான தொழில் முயற்சிக்கான விழுது வழங்கும் நிகழ்வு இன்று (26) திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் பிற்பகல் 6.00மணியளவில் வர்த்தக சம்மேளன தலைவர் கே.குலதீபன் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் நிதிதிட்டமிடல் அமைச்சர் ரவி கருணாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.கிழக்கு மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி.கிழக்கு மாகாண பிரதம செயலாளர்.திணைக்கள செயலாளர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.