வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

றட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மூன்று அமைச்சர்களுக்கு அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்து அமைச்சர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை (17.01.2017) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுளூ

'நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வறட்சிக் காலநிலைக் காரணமாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப்பகுதிகளில் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வீழ்ச்சி கண்டுள்ளதால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வறட்சி தொடர்பாக விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமொன்று கடந்த 13ஆம் திகதி நடத்தப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் இதுவரை சுமார் 68ஆயிரம் ஏக்கர் விவசாய காணி அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 13,164 விவசாயிகளும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக 76,199 பொது மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க தங்களது அமைச்சுக்களினால் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பில் நடத்தப்பட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அம்மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் மூன்று அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -