தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செமட்ட செவன வீடமைப்பு நிர்மாணப்பணிகள் இன்று காலை பேசலை முருகன் கோவில் கிராமத்தில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனால் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகவும் மன்னர் பிரதேச செயலாளர் வசந்தகுமார் கெளரவ அதிதியாகவும் மன்னார் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சமியு முஹம்மது பஸ்மி பேசலை முருகன் கோவில் பிரதான தவிசாளர் குப்புசாமி ஆறுமுகம் பேசலை ஐக்கிய தேசியக்கட்சி போர்ஜியா பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மேற்படி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
பேசலை முருகன் கோவில் பிரதம குருக்கள் தர்மகுமார சர்மா அவர்களின் சமய அனுஷ்ட்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் மேற்படி அதீதிகளால் பன்னிரண்டு வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
A.R.A.RAHEEM.